வானதி சீனிவாசன்
கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் விவசாயப் பின்னணியில் இருந்து வந்தவர். ஆரம்பக் கல்வியை கோயம்புத்தூரில் முடித்தார், மேல்நிலைக் கல்வியை கோவையிலும் சென்னையிலும் முடித்தார். 1993 இல், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். அவர் தீவிர அரசியலில் நுழைந்தவுடன் தனது அரசியல் வாழ்க்கையில் முதன்மையாக கவனம் செலுத்தத் தொடங்கினார் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு முறை (2011 இல் தமிழ்நாட்டின் மயிலாப்பூர் மற்றும் 2016 இல் கோவை தெற்கு, தமிழ்நாடு) போட்டியிட்டுள்ளார்.
பயணம்
தேசிய மகளிர் ஆணைய தலைவராகப் பணியாற்றத் தொடங்கினார், இன்றுவரை தலைவராக தனது பதவியைத் சிறப்பாக தொடர்கிறார்.
கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் சங்கத்தின் தலைவரானார்.
இரண்டாவது முறையாக கோவை தெற்கு தொகுதி தேர்தலில் போட்டியிட்டார்.
2012 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் வழக்கறிஞர் விருதை பெற்றார்.
சட்ட மன்ற தேர்தலில் முதல்முறையாக மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார்.
CBFC உறுப்பினராக சிறப்பாக பணியாற்றினார்.
வழக்கறிஞராகவும், பாஜக உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றத் தொடங்கினார்.
காஷ்மீர் போராளிகளுக்கு எதிராகவும், பாகிஸ்த்தானின் தூண்டுதலுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினார்.
1970 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் கோவை மாவட்டத்தில் உளியம்பாளையம் கிராமத்தில் பிறந்தார்.
வானதி சீனிவாசன் 1993 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக பா.ஜ.க. வின் முக்கிய அங்கம் வகிக்கிறார். கட்சிக்குள் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் அக்டோபர் 2020 இல் பா.ஜ.க வின் மகளிர் பிரிவான மகிளா மோர்ச்சாவின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
வானதி சீனிவாசன் சமீபத்தில் கோயம்புத்தூர் – தெற்கு தொகுதியில் ம.நீ.ம கட்சி நிறுவனரும் நடிகருமான கமல்ஹாசனை தோற்கடித்து, மே 2021 இல் வெற்றி பெற்றார்; அவர் தமிழகத்தில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்பது இதுவே முதல் முறையாகும்.
கி.மீ. பயணம்
வானதியின் குரல்
ஆதரவாளர்களின் குரல்





